Print this page

தினேஷ் சாஃப்டர் மரண வழக்கில் நடப்பது என்ன?

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றம் இன்னும் முடிவு செய்யவில்லை என கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று மீண்டும் இடம்பெற்ற போதே அது இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நீதிவான் விசாரணையின் சாட்சிகளை அழைக்க முடிவு செய்ததாக அவர் அங்கு கூறினார்.

மரணம் தொடர்பான பல்வேறு தகவல்கள் ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டதால், விசாரணையை தனிப்பட்ட முறையில் நடத்த வேண்டும் என்று தினேஷ் ஷாப்டர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.