Print this page

தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் இன்று முக்கிய சந்திப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச் செயலாளர்கள் இன்று(24) தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் கட்சிகளை தேர்தல்கள் ஆணைக்குழு சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

எதிர்கால தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி நடைபெறவுள்ளது.