Print this page

எதிர்பார்த்த விசேட வர்த்தமானி வெளியானது

February 01, 2023

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தோற்றும் வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (31) வெளியிட்டுள்ளது.

80,720 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வேட்பாளர்கள் 58 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.