Print this page

நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கின் நிலைமை

February 01, 2023

கொழும்பு கோட்டை கிரிஷ் டிரான்ஸ்வர்ட் சதுக்கத்தின் 4.3 ஏக்கர் குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக ஜூன் 21ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்குமாறு கோட்டை நீதவான் இன்று (01) உத்தரவிட்டுள்ளார். .

சுமார் 70 மில்லியன் ரூபா நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சம்பவம் தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், முறைப்பாட்டின் சார்பில் அந்தப் பிரிவு ஆஜராகி நீதிமன்றில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.