Print this page

7 பேரை பலியெடுத்த நானுஓயா விபத்து, பஸ் சாரதி பிணையில் விடுதலை

February 02, 2023

அண்மையில் நானுஓயாவில் பாரிய வாகன விபத்தில் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று நுவரெலியா நீதவான் நாலக சஞ்சீவ எயிதிர்சிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர் மூன்று சரீரப் பிணைகளில் ரூ. தலா 100,000 மற்றும் ரூ. 25,000 ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார். 

ஹொரணையைச் சேர்ந்த 62 வயதான இவர், நுவரெலியா பொது வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜனவரி 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

பஸ் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜனவரி 20 அன்று ரதல்லெ குறுக்குவழி வீதியில் பேருந்து ஒன்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் 100 அடி பள்ளத்தில் விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். 

வேன் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட வேனில் பயணித்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பேருந்தில் இருந்த மாணவர்கள் உட்பட 53 பேர் காயமடைந்துள்ளனர்.

வேனில் பயணித்த ஐந்து பேரும் உறவினர்கள். உயிரிழந்தவர்களில் 8, 12 மற்றும் 19 வயதுடைய மூன்று குழந்தைகளும் அடங்குவர். 

Last modified on Thursday, 02 February 2023 06:47