Print this page

இரண்டு நாட்களுக்கு மூடப்படும் மதுபானசாலைகள்

February 02, 2023

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் (04) நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், போயா தினத்தை முன்னிட்டு, 5ம் திகதி நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும்.

அதன்படி, நாளை இரவு மூடப்படும் மதுபானசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படும்.