Print this page

பிரதமர் கதிரையில் அமர்வது குறித்து மஹிந்த ராஜபக்ஷ கருத்து

February 12, 2023

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம்.

இந்த செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

 வார இறுதி ஒரு தேசிய பத்திரிகையில் கருத்து தெரிவிக்கும் போது.,

தான் ஒரு கட்சித் தலைவர் என்றும் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல் முன்னணியின் தலைவர்  என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தலைவணங்குவதே தமது கொள்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை சிறப்பாக செய்து வருவதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.