Print this page

தேர்தல் செலவிற்கு தலதா மாளிகையில் கை வைத்தாரா மஹிந்த? மீண்டும் சர்ச்சை

February 13, 2023

தலதா மாளிகையின் தியவடன நிலமேவாயவின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் எனக் கூறும் நிஹால் பெர்டினான்ட், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தலுக்குச் செலவு செய்வதற்காக தலதா மாளிகையில் இருந்து பணத்தைக் கட்டியவர் தாம் என குறிப்பிடுகின்றார்.

அரண்மனைக்கு சொந்தமான நிலங்களை விற்று அரண்மனையின் தங்கத்தை திருடியதாகவும் தியவதன நிலமே மீது குற்றம் சாட்டுகிறார்.

தலதா மாளிகையின் நாளாந்த வருமானம் 25 இலட்சத்திற்கு மேல் உள்ள போதிலும் அவை தணிக்கை செய்யப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாநாஹிகளிடம் இந்த விவரங்களைத் தெரிவிக்கச் சென்றபோது ஒரு துண்டு கொடுத்துவிட்டுத் திரும்பிச் செல்லச் சொன்னதாகக் கூறுகிறார்.

இணைய சேனலில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.