Print this page

தலதா மாளிகை சர்ச்சைகாரர் மன நோயாளியா?

February 13, 2023

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தியவடன நிலமே நிலங்க தெல பண்டாரவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரண்மனையில் பணம் வழங்கப்பட்டதாகவும், அரண்மனையில் தங்கம் மற்றும் காணி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை பொய்யான தகவல்கள் எனவும்  பொது அமைப்பின் தலைவர் நிலந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்தை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ள நிஹால் பெர்னாண்டோவின் கருத்துக்கள் அடிப்படையற்றவை எனவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2010 ஜனாதிபதித் தேர்தலின் போது 5000 ரூபா நாணயத்தாள்களை மூட்டையாக கட்டி மஹிந்த ராஜபக்ஷவிடம் கொடுத்ததாக குறிப்பிட்ட போதிலும் அப்போது 5000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்படவில்லை என நிலாந்த ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நிஹால் பெர்னாண்டோவை கத்தோலிக்க அடிப்படைவாதிகள் குழுவொன்று பயன்படுத்தி தத்தா மாளிகைக்கு அவமதிப்பு ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.