Print this page

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேற மஹிந்தவும் காரணம் - எஸ்.பி

February 14, 2023

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானங்கள் தவறானவை என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க கூறுகிறார்.

“எமது கட்சியைப் பொறுத்தவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் கொடியை மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தது தவறு. தன்னிச்சையாக கட்சியை மைத்திரிபாலவிடம் ஒப்படைத்த பின்னரே கட்சிக்கு இந்த அழிவு நடந்தது. கட்சியை இழந்தோம். அதற்கு மகிந்த ராஜபக்ச தான் பொறுப்பேற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உண்மையில் அவர் எடுத்த முடிவு தவறானது. அந்த விஷயங்கள் மட்டுமல்ல. அத்துடன், கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதற்கு மகிந்த ராஜபக்ச ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அவர் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் நெருக்கடி காலத்தை உருவாக்கினார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Last modified on Tuesday, 14 February 2023 02:56