Print this page

கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை ஆரம்பம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்ககைள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உப்புல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதனை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.