Print this page

கொழும்பு கோட்டையில் போராட்டம், போக்குவரத்தும் தடை

February 22, 2023

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்​கோட் மாவத்தையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பெருந்தொகையான தொழில் அதிபர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 

துறைமுகங்கள், பெட்ரோலியம், மின்சாரம், வங்கிகள் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் ஊழியர்கள் ஏராளமானோர் அந்த இடத்தில் குவிந்துள்ளனர்.