Print this page

தொடர்புகளை வைத்திருந்தாலும் கைது

வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் மாத்திரமன்றி பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

கடற்படை மற்றும் விமானப் படையின் பேச்சாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.