Print this page

மொட்டு தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து பசில் நீக்கம்! புதியவர் இதோ

பசில் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

தேசிய அமைப்பாளராக சபுமல் வளவ்வத்த பெயரிடப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆவணங்களில் அந்த நபரின் பெயர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

​மொட்டு செயலாளர் சாகர காரியவசம் தொடர்ந்தும் நாட்டிற்கு பொய் சொல்லி வருவதாகவும், பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்சி யாப்பும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட கட்சி யாப்பும் வெவ்வேறானவை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்க பாடுபட்டவர் சாகர காரியவசம் என்றும், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கடிதம் அனுப்பி அந்தப் பணிக்கு பங்களித்ததாகவும், அதனால் பொதுஜன பெரமுன தனித்து நிற்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.