Print this page

தடம் புரண்டது யாழ்தேவி

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலின் பெட்டி ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தடம் புரண்ட ரயில் பெட்டியை அகற்றும் பணி தற்போது இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.