Print this page

தினேஷ் மீது குற்றம் சுமத்தி மஹிந்தவை பிரதமராக்க முயற்சி

இந்த வருடத்தின் மத்தியில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் தயாராக இருப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அது பொய்யானது என பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமரின் தலையீடு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர்.