Print this page

79 பெண்கள் கொலை

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக 567 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 79 பெண்கள் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறது.

பாலியல் பலாத்காரம், கடுமையான உடல் காயம் மற்றும் கொலை ஆகியவை பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களில் அதிகம் பதிவாகியதாக தணிக்கை அறிக்கை கூறுகிறது.

அதன்படி, அந்த ஆண்டில் 186 கற்பழிப்புகளும், 194 கடுமையான காயங்களும் பதிவாகியுள்ளன.

அந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக பதிவான 567 வன்முறை குற்ற வழக்குகளில் 355 வழக்குகள் தொடர்பான விசாரணைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படவில்லை என்பதும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தணிக்கை பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை பொலிஸ் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 2021ஆம் ஆண்டு தொடர்பான கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.