Print this page

பொலிஸாரின் கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் மேலும் ஒரு உயர் பலி

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 7ஆம் திகதி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரின் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

கண்ணீர் புகைக்குண்டு தாக்கியதில் குறித்த தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.