Print this page

ஜூன் மாதத்திற்குள் பஸ் கட்டணம் குறைக்கப்படும்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் நிலையானதாக இருந்தால், ஜூன் மாதத்திற்குள் பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடரும் எனவும், அது நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் கடனைப் பெற்ற பிறகு, பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பும், என்றார்.