Print this page

காற்று மாசடைதல் அதிகரிப்பு, மக்களே அவதானம்

இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் காற்று மாசுபாடு சற்று அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உணர்திறன் உடையவர்களின் உடல்நிலையைப் பாதிக்கக் கூடிய காலநிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முகமூடிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நிலைமையைத் தவிர்க்கலாம் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

அமெரிக்க காற்றின் தர சுட்டெண்ணின் படி, கொழும்பு நகரில் இந்த எண்ணிக்கை 149 %ஆக பதிவாகியுள்ளதுடன், கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், கொழும்பு நகரில் இருண்ட நிலை காணப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 83 % என்ற எண்ணிக்கை பதிவாகியுள்ள போதிலும், ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் 100%கும் அதிகமாகவும், புத்தளம் நகரில் 149% ஆகவும், காலி, கராப்பிட்டிய மற்றும் பொலன்னறுவை நகரங்களில் 143 % ஆகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றும் (12) மற்றும் முந்தினம் (11) வளி மாசடைதல் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் பதிவாகியுள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் நிலைமை குறையலாம் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் (சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு) பிரதிப் பணிப்பாளர் நாயகம் சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த நிலைமையை சாதாரண அதிகரிப்பு என வர்ணிக்க முடியும் எனவும் இது அனேகமாக வேறு நாட்டிலிருந்து வந்த நிலையே தவிர இலங்கையில் உருவாகும் மாசடைந்த காற்றின் நிலை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டெல்லியில் மோசமான காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி த

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஒரு 150-200 மதிப்பை எட்டியதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.