Print this page

ஆங்கிலத்தில் சட்டக் கல்லூரி பரீட்சை, அரசாங்கத்திற்கு தோல்வி

சட்டக் கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

வர்த்தமானி அறிவித்தலுக்கு ஆதரவாக 113 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு வாக்கெடுப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதன்படி வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.