Print this page

தேர்தல் குறித்து முக்கிய கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று (23) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையிலும் இன்று (23) காலை கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.