Print this page

எதிர்வரும் நான்கு வருடங்களுக்குத் தேர்தலே கிடையாது

நான்கரை வருடங்களுக்கு தேர்தலை நடத்தாமல் இருக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும், அண்மையில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் எம்.பி கூறினார். 

தற்போதைய ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை சீர்குலைத்து வருவதாகத் தெரிவித்த அவர், தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராக பல தீவிரமான தீர்மானங்கள் விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.