Print this page

இன்று வெப்பநிலை அதிகரிக்கும் பகுதிகள்

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (20) கடும் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அப்பகுதி மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், வயோதிபர்கள், சிறு குழந்தைகள், வெளியூர் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், வெப்பமான காலநிலை தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.