Print this page

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 60 பேர் கைது

வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிச்செயற்பட்ட சம்பவம் தொடர்பில், 60 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடமேல் மாணத்தில் கைது செய்யப்பட்ட 60 பேரில் சிலரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடி​க்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.