Print this page

முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கு ஆளுநர் பதவி

மாகாண ஆளுநர்களாக பதவி வகிக்கும் நான்கு பேர் விரைவில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீக்கப்படும் நான்கு ஆளுநர்களில் ஒருவர் வேறு மாகாண ஆளுநராக இடமாற்றம் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு ஆளுநர் பெரிய அரசு நிறுவனத்தில் உயர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இடமாற்றம் செய்யப்படவுள்ள ஆளுநருக்கு அவர் தற்போது பதவி வகிக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான அமைச்சர்களின் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே அவருக்கு இடமாற்றம் வழங்கப்படும்.

இந்நிலையில், இடமாற்றம் செய்யப்படும் ஆளுநரை தவிர, மற்ற இடங்களுக்கு, மூன்று புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, வட்டாரங்கள் தெரிவித்தன.

அதற்கு மூன்று முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.