Print this page

ஜனாதிபதி - சீன பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன பிரதமர் Li Keqiang ஆகியோர், நேற்று பிற்பகல் பீஜிங் நகரில் சந்தித்து பேசியுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற எதிர்பாராத பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை தெரிவித்த சீன பிரதமர், பயங்கரவாத சவால்களை வெற்றிகொள்வதற்கு சீன அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.