Print this page

சஹரானின் பயங்கரவாத குழுவில் 97 சதவீதமானவர்கள் கைது

 சஹரானின் பயங்கரவாத குழுவில் நூற்க்கு 97 சதவீதமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

விரைவில் ஏனையவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய, நாத்தாண்டியா மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் ஒரு குழுவினரே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.