web log free
September 29, 2023

வவுனியாவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இரு பலியான இளம் உயிர்கள்

வவுனியா, பறையனாலகுளம், நீலியமோட்டையில் 26 வயதுடைய பெண்ணைக் கொன்றுவிட்டு, 24 வயதுடைய இளைஞன் இன்று அதிகாலை தன்னைத்தானே சுட்டுக் கொன்ற​மை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடொன்றில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மற்றும் சந்தேகநபர் இருவரும் நிலைமோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் திருமணமான பெண் எனவும், கணவர் மற்றும் குழந்தையுடன் நீலியமோட்டையில் வசிப்பவர் எனவும் சந்தேக நபர் தகராறு காரணமாக வீட்டில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருமணத்திற்கு முன்பு சந்தேக நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பறையனாலங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.