Print this page

கஞ்சா ஏற்றுமதி செய்ய விரைவில் வருகிறது சட்டம்

மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதற்கான அவதானிப்புகள் அழைக்கப்பட்டு, அவதானிப்புகளைப் பெற்ற பின்னர், சட்ட வரைவுகளைத் தயாரிப்பதற்கு வழியமைக்கப்படவுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தினால் கஞ்சா ஏற்றுமதி மற்றும் பெரிய அளவில் பயிரிடுவதற்கு பொருத்தமான விண்ணப்பதாரர்களை வருடாந்தர அனுமதி முறை மூலம் அடையாளம் காண அமைச்சரவைப் பத்திரம் முன்மொழியப்பட்டுள்ளது.