Print this page

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கே கொலை அச்சுறுத்தல்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிடுகிறார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தான் பதவியில் இருக்கும் வரை போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுவை ஒழிக்க பாடுபடுவேன் என்றும், பணிபுரியவே பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து, பின்னோக்கிச் செல்லாமல் மேலும் ஒரு அடியை முன்னோக்கி வைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.