Print this page

ஜனாதிபதியின் உள்ளூராட்சி விவகார ஆலோசகராக ரோசி நியமிப்பு

கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது கவுரவ பதவியாக வழங்கப்பட்டு மற்றையது ஊதியம் வழங்கப்படாமல் போக்குவரத்து வசதி மட்டும் செய்து தரப்படுகிறது.

தான் மேயராக பதவி வகித்த போது பயன்படுத்திய உத்தியோகபூர்வ கார் மற்றும் சாரதியை ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைத்து அதனை தனது போக்குவரத்து வசதிகளுக்கு பயன்படுத்துமாறும் முன்னாள் மேயர் ஜனாதிபதி அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, கார் மற்றும் அதன் முன்னாள் சாரதியை ஜனாதிபதி செயலகத்தில் இணைக்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.