Print this page

ஜனக்கவின் வெற்றிடத்தை நிரப்பும் நபர் இவர்தான்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான டக்ளஸ் நாணயக்காரவை நியமிக்க அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாணயக்கார தற்போது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சபை உறுப்பினராக பணியாற்றுகிறார்.

1983 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட இவர் அரச சேவையில் பல உயர் பதவிகளை வகித்தார்.

அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சின் செயலாளர் போன்ற உயர் பதவிகளை வகித்து ஓய்வுபெற்ற அவர், கடந்த ஜூலை மாதம் முதல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவை பாராளுமன்றம் நீக்கியதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.