Print this page

ஹரினை அருகில் வைத்துக் கொண்டு டயானா செய்த காரியம்

அமைச்சரவை அமைச்சர்கள் தமது கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்களை பணியாற்ற அனுமதிப்பதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் விசேட கூட்டம் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர்கள் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் அந்த அமைச்சுக்களின் பிரிவுகளை பகிர்ந்தளிக்கவில்லை எனவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

தான் மட்டுமல்ல, அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்களும் இந்த கதியை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனைத் தெரிவித்த போது, சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.