Print this page

பரீட்சை முடியும் வரை ஆர்ப்பாட்டங்கள் வேண்டாம்

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முடியும் வரை மாணவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்மாணவர்கள் கடந்த வருடம் (2022) டிசெம்பர் மாதம் பொதுப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த நிலையில் 06 மாத கால தாமதத்தின் பின்னர் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பரீட்சைக்கு முகம்கொடுக்கும் போது அசௌகரியத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சை எதிர்வரும் 8ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த வாரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.