Print this page

மஞ்சு நிஸ்ஸங்க தொடர்பில் தீவிர விசாரணை

குளோபல் ஸ்ரீலங்கா காங்கிரஸின் தலைவர் மஞ்சு நிஸ்ஸங்க தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் விபத்தின் பின்னர் ஏற்பட்ட விபத்தின் இழப்பீடு தொடர்பான கொடுக்கல் வாங்கல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இந்த விசாரணை கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள முறைப்பாடுகளை கவனத்தில் கொள்வதே இதற்குக் காரணம்.

இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சொத்து விசாரணைப் பிரிவினரால் மஞ்சு நிஸ்ஸங்கவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அன்றைய தினம் அங்கு ஆஜராகவில்லை.

அழைப்பு கிடைக்கவில்லை என பொலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அதன்படி, அவருக்கு அடுத்த வாரம் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திஞல் போராட்டம் இடம்பெற்ற நாட்களில் இவர் அருகில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கியதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில் கவனம் செலுத்தி, அப்படிச் செலவு செய்ய அவர் எப்படி பணம் சம்பாதிக்கிறார் என்பதையும் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

அவரது சொத்துக்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும்.