Print this page

சப்ரகமுவ புதிய ஆளுநர் நவீன் திசாநாயக்க

சப்ரகமுவ மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நியமித்தார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவி வகித்த டிக்கிரி கொப்பேகடுவ அந்தப் பதவியை, வௌ்ளிக்கிழமை (02) இராஜினாமா செய்திருந்தார்.

அவரது வெற்றிடத்துக்கே நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட நவீன் சிறிது காலம் கட்சி செயற்பாடுகளில் இருந்து விலகியிருந்த நிலையில் தற்போது ஆளுநர் பதவி பெற்றார்.