Print this page

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் மீது இன்று வாக்கெடுப்பு இல்லை

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான விவாதம் இன்று (21) பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றில் இன்று காலை கருத்துத் தெரிவித்த அவைத் தலைவர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இந்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அடுத்த சபை அமர்வில் மேலும் இரண்டு நாட்களுக்கு நடத்துவதற்கும் அன்று வாக்கெடுப்பு நடத்தவும் நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.