Print this page

நடு வீதியில் கிடந்த பிக்குவின் சடலம்

நடு வீதியில் பிக்கு ஒருவர் சடலமாக கிடந்த நிலையில் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளார். 

துன்பானே பிரதி சங்கநாயக்க மற்றும் தம்பிட்ட விகாரையின் விஹாராதிப தேரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காவி உடை அன்றி வேறு ஆடை அணிந்திருந்த அவர், கீழே விழுந்து உயிரிழந்ததுடன், சடலத்தின் அருகில் காய்கறிப் பை மற்றும் கைத்தொலைபேசி என்பன காணப்பட்டதாக கூறப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.