Print this page

பாதாள உலகக் குழு உறுப்பினர் அதிரடியாக சுட்டுக்கொலை

இன்று (20) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் கைது செய்ய சென்ற போது இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையின் போது மினுவாங்கொட, மஹகம, ஹொரம்பல்ல வீடொன்றில் பதுங்கியிருந்த பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலக உறுப்பினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த 29 வயதுடைய சந்தேக நபரான மாணிக்குகே கசுன் லக்ஷித சில்வாவையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹோமாகம பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் சந்தேகநபர், டுபாயில் மறைந்திருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரைச் சுட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் சுடப்பட்ட இடத்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் பயன்படுத்திய T-56 துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், மினுவாங்கொடை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வு ஆய்வகத்துடன் (SHOCO) இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.