Print this page

கிழக்கு ஆளுநரின் இனபேதமற்ற சேவைகளுக்கு பாராட்டு

கிழக்கில் மாற்று திறனாளிகளுக்கான உதவி தொகை மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உதவித் தொகை வழங்கி வைத்ததுடன், நந்தவனம் முதியோர் இல்லம், ADVRO முதியோர் இல்லம், கிழக்கு இஸ்லாமிய மாற்றுத்திறனாளிகள் இல்லம், முஸ்லிம் முதியோர் இல்லம் போன்றவற்றின் நிர்மாணப் பணிகளுக்கு நிதியுதவியும் வழங்கி வைத்தார். 

அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களையும் ஆளுநர் வழங்கி வைத்தார். 

இன் பாகுபாடு இன்றி அனைத்து மக்களையும் அரவணைத்து செயற்படும் ஆளுநரின் சேவைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.