Print this page

ஹரீன் - மனுஷ ஆகியோரின் எம்பி பதவிகளுக்கு ஆபத்து

சமகி ஜன பலவேகவில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார பற்றிய தகவல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த இரண்டு எம்.பி.க்களும் இனி சமகி ஜன பலவேகவின் உறுப்பினர்கள் அல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அக்கட்சி அறிவிக்கும் என பேச்சாளர் தெரிவித்தார்.

அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் தெரிவிக்க உள்ளது.