Print this page

ஊடகவியலாளர் உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - சிபிஜே மற்றும் தொழிற்சங்கங்கள்

பத்திரிகையாளர் தரிந்து உடுவரகெதர நேற்று இலங்கை பொலிஸாரினால் கைதுசெய்ய்பட்டுள்ளார்.

ஈபிஎவ் ஈடிஎவ் திருட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போதே இவர் கைதுசெய்ய்பட்டுள்ளார்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நீர்த்தாரை கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை காவல்துறை அதிகாரிகள், ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்வதுடன், அவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

"இலங்கை ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை கைது செய்தமை மற்றும் பொலிசார் தாக்கியமை பயங்கரமானது, அதிகாரிகள் உடனடியாக அவரை விடுவித்து மருத்துவ வசதியை வழங்க வேண்டும்" என CPJ இன் ஆசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பெஹ் லிஹ் யி தெரிவித்துள்ளனார்.

"இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை போலீசார் அடையாளம் காண வேண்டும் ,இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்
மற்றும் ஊடகவியலாளர்கள்அச்சமின்றி போராட்டங்களை செய்தியாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்."

 

Last modified on Saturday, 29 July 2023 03:39