Print this page

எரிபொருள் விலையில் மாற்றம் வருகிறதா?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 101 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் பெற்றோலையும், 61 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 50 வீதமான இலங்கை ஆட்டோ டீசலையும் போதியளவு கையிருப்பில் வைத்திருப்பதற்குத் தேவையான எரிபொருள் நேற்று (29) ஆர்டர் செய்யப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை மாற்றத்திற்கான எதிர்பார்ப்பே இதற்கு காரணம் என அவர் கூறினார். 

கடந்த மாதம், இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் கீழ் எரிபொருள் இருப்புக்களை முறையாக பராமரிக்க தவறிய பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் தேவையான குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை பேணுவதற்கு தேவையான கட்டளைகளை வழங்குமாறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதிய எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது.