Print this page

பதவி விலகத் தயார் – ரிஷாட்

ஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே அவர் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தன் மீது எதிரணியால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்த ரிஷாட், அவை பொய்யானவை எனக் குறிப்பிட்டுள்ளார்.