Print this page

சஜித் அதற்கு சரிபட்டு வரமாட்டார் - விக்கி

சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதி பதவிக்கு சஜித் தகுதியற்றவர் என தெரிவித்துள்ளார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்த அவர், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என எவரேனும் கூறினால் அது கட்டுக்கதை எனத் தெரிவித்தார்.

பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் அது தொடர்பான அதிகாரங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றி அறிக்கையொன்றை வெளியிடத் தயார் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தமிழ் அரசியல் கட்சிகள் அறிக்கைக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.