Print this page

இலங்கைக்குள் நுழைய சீன கப்பலுக்கு அனுமதி

சீன ஆய்வுக் கப்பலான Xi Yan 06 நாட்டிற்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதரகமும் கப்பலை வரவழைக்க வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

சீன ஆய்வுக் கப்பலைக் கொண்டு நாரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்தக் கப்பல் இலங்கைக்கு வரும் திகதி இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.