Print this page

தயாசிறி வெளியே, கட்சி தலைமையகத்திற்கு பூட்டு

September 06, 2023

கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகரவை அப்பதவியில் இருந்து நீக்கியதால் அவருக்கு விசுவாசமான தரப்பினர் வந்து சில குழப்பங்களை ஏற்படுத்துவார்கள் எனவும், ஆவணங்கள் வெளியே செல்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கட்சித் தலைவரின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி இன்று (06) பிற்பகல் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.