Print this page

திலங்க சுமதிபாலவை நீக்க முடிவு

September 10, 2023

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவதானம் செலுத்தி வருகின்றது.

தற்போது அந்த பதவிக்காக முன்னாள் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே திலங்க சுமதிபாலவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்திற்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Sunday, 10 September 2023 17:08