Print this page

ஜனாதிபதிக்கு ஐதேக முக்கியஸ்தர்கள் முன்வைத்த கோரிக்கை

September 25, 2023

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொஹொட்டுவவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் யோசனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் திடீரென சந்தித்து இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அவ்வாறு இல்லை என்றால் நிமல் லான்சா உள்ளிட்ட அணியினரின் ஆதரவு தமக்கு இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.